தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை ஊத்தங்கரை பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான செங்குட்டுவன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியச் செயலாளர் சுவாமிநாதன், நகரச் செயலாளர் பாபுசிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிசெல்வம், துணைச் செயலாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பேச்சாளர் சேலம் சுஜாதா கலந்துகொண்டு பேசினார். தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் மாணவரணி குப்புராஜ், மகளிரணி சின்னத்தாய் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.