வேளாண் கல்லூரி மாணவியருக்கு காளான் வளர்ப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் திருச்சி, திருவண்ணாமலை மற்றும் கோவை ஆகிய பகுதிகளிலுள்ள வேளாண் கல்லூரிகளைச் சேர்ந்த 29 மாணவியர் தங்கி பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, காளான் வளர்ப்பு பயிற்சி அறிய களப் பயணம் மேற்கொண்டனர்.
இந்த மாணவியருக்கு, காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரான ரோஜா, சிப்பி காளான், பால் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டுப் பொருள்களை தயாரிப்பது, அதனை சந்தைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை அளித்தார். இதில், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.