கட்செவி அஞ்சலில் அவதூறு: இருவர் கைது

  ஊத்தங்கரை அருகே கட்செவி அஞ்சலி அவதூறு செய்த இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.


  ஊத்தங்கரை அருகே கட்செவி அஞ்சலி அவதூறு செய்த இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஊத்தங்கரையை அடுத்த பெரியதள்ளப்பாடியைச் சேர்ந்தவர் சின்னக்கண்னு (56).  இவர் தள்ளப்பாடி அம்பேத்கர் சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய அவரது  நண்பர் சிவா கட்செவி  அஞ்சலில் (வாட்ஸ்அப்) வந்துள்ள குறுஞ்செய்தியை காண்பித்துள்ளார். அதைப் பார்த்த சின்னக்கண்னு சிங்காரப்பேட்டை காவல்  நிலைய ஆய்வாளர் குமரனிடம் குறுஞ்செய்தியைக் காண்பித்துள்ளார். அதில் அரியலூர் மாவட்டம்,  பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சாதிமோதலை வைத்து, ஜாதி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி அனுப்பியுள்ள  குறுஞ்செய்தியைக் கட்செவி அஞ்சலில் வெளியிட்ட பெரியதள்ளப்பாடி   அம்பேத்கர் நகரைச்  சேர்ந்த  மணிகண்டன் (24), விமல்ராஜ் (23) ஆகியோர் மீது சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும்  கைது  செய்து  விசாரித்து  வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com