தருமபுரி அருகே புலிகரையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பயிற்சி நிறுவன முதல்வர் வெ.ஹேமலதா தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்து பேசினார். புலிகரை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செந்தில் பேசினார். இதையொட்டி, மாணவ, மாணவியரின் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, புலிகரை ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை தூய்மை செய்யும் பணியிடும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஈடுபட்டனர். தொடக்க விழாவில், திட்ட அலுவலர் ச.செந்தில்குமார், உதவி திட்ட அலுவலர் ப.சிலம்பரசி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த முகாம், வரும் பிப். 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.