அரூரை அடுத்த தீர்த்தமலையில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை (பிப். 23) நடைபெறுகிறது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை, தருமபுரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் சார்பில், இந்த இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர். இதில், கண் விழித்திரை மற்றும் கண் அழுத்த நோய்களுக்கு சிறப்பு பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன. கண்புரை உள்ளவர்களுக்கு இலவசமாக அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படும் என தருமபுரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.