அரூர் அருகே பொங்கல் விழாவையொட்டி வைக்கப்பட்ட அரசியல் விளம்பரத் தட்டிகள் கிழிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர் வட்டம், பெரியப்பட்டியில் பொங்கல் விழாவையொட்டி ஒரு அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளை மர்ம நபர்கள் கிழித்தாகக் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதாம்.
தகவல் அறிந்த அரூர் வருவாய்க் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோடி, டிஎஸ்பி ஏ.சி.செல்லப்பாண்டியன், காவல் ஆய்வாளர் ஆர்.முரளி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கிராம மக்களிடம் சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.