பாப்பிரெட்டிப்பட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர்.
திருச்சியில் ஜனவரி 23-ம் தேதி தேசம் காப்போம் மாநாடு நடைபெறுவது குறித்து பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரில் நடைபெற்ற பிரசாரத்தில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநில துணைச் செயலர் கி.அதியமான், தொகுதி அமைப்பாளர் மாதேஷ், நிர்வாகிகள் தங்கதுரை, ஜெகநாதன், சுபாஷ், இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.