கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதியில் சனிக்கிழமை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
ஐயப்ப சுவாமிக்கு உகந்த கார்த்திகை மாதமான கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் சனிக்கிழமை காலை பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் செட்டியார் தெருவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கும், சிலர் ராஜ ராஜேஸ்வரி ஆசிரமம், பஞ்சமுக விநாயகர் உள்ளிட்ட கோயில்களுக்கும் சென்று ஐயப்பன் பஜனை பாடல்களை பாடி குருசாமியிடம் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.