ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் போட்டிகள்

நாமக்கல் மாவட்ட அளவிலான ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் போட்டிகள் ராசிபுரம் ஸ்போர்ட்ஸ் ட்ரெயினிங் சென்டரில் சனிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட அளவிலான ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் போட்டிகள் ராசிபுரம் ஸ்போர்ட்ஸ் ட்ரெயினிங் சென்டரில் சனிக்கிழமை நடைபெற்றது.
வயது அடிப்படையில் நான்கு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக போட்டிகளை நாமக்கல் மாவட்ட ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் வி. பாலு துவக்கி வைத்தார். இதில் ஸ்னூக்கர் போட்டியில் குருசாமிபாளையம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவர் எல். கிஷோர், பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவி மதுனிஷா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். பில்லியர்ட்ஸ் பிரிவில் ஞானோதயா பள்ளி மாணவர் மைத்தீஸ்வரன், ஜெவிஎம்., பள்ளி மாணவி கவியரசி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 
பால்-8 பிரிவில் எஸ்விபி., மாணவர் கிஷோர், எஸ்.ஆர்.வி. பள்ளி மாணவி மோகனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் அசோசியேஷன் செயலர் ஆர். ரஞ்சித் குமார், பொருளாளர் ஆர். நவநீதன் ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com