சாரண இயக்கத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்தமைக்காக, நாமக்கல் மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
சாரண, சாரணிய இயக்கத்தில் 19,720 சாரண, சாரணியர்களை 2017-2018-ஆம் கல்வியாண்டில் சேர்த்து மாநில அளவில் சிறப்பிடம் பெற்றமைக்காகவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100 சதவீத படைப்பதிவு செய்தமைக்காகவும், மாநில தலைமையகத்தால் நாமக்கல் மாவட்ட சாரண இயக்கத்துக்கு விருது வழங்கி பாராட்டப்பட்டது.
விருதுக்கான கோப்பையை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.உஷா செவ்வாய்க்கிழமை காண்பித்து பாராட்டும், வாழ்த்தும் பெற்றார். நிகழ்வில் மாவட்டச் செயலர் பி.வி.குமார், உதவிச் செயலர் விஜய் உள்பட அரசுத் துறை அலுவலர்கள்
கலந்துகொண்டனர்.