வன்னியர் சங்கம் சார்பில் 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு வீர வணக்க நாள் நிகழ்ச்சி பாமக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக மாவட்ட அமைப்புச் செயலர் ஆ. மோகன்ராஜ் தலைமை வகித்தார். நகர வன்னியர் சங்கத் தலைவர் சு. கணேசன் வரவேற்றார். பாமக மாநில துணைப் பொதுச் செயலர் ஒ.பி. பொன்னுசாமி, நகர பாமக செயலர் கே. மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்று தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.