பாலப்பட்டியில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடக்கி வைத்தார்

பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாலப்பட்டியில் ரூ. 8 லட்சம் செலவில்  உயர் மின்கோபுர

பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாலப்பட்டியில் ரூ. 8 லட்சம் செலவில்  உயர் மின்கோபுர விளக்கு அமைப்பதற்கான பூமி பூஜையை பரமத்தி வேலூர் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
பாலப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தொகுதி உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி முன்னிலை வகித்தார். பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.எஸ். மூர்த்தி கலந்து கொண்டு ரூ. 8 லட்சம் மதிப்பிலான உயர் மின்கோபுர விளக்கு அமைப்பதற்கான பூமி பூஜையைத் தொடக்கி வைத்தார்.
பின்னர் ஓலப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்  ரூ. 4.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர பயன்பாட்டைத் தொடக்கி
வைத்தார். 
நிகழ்ச்சியில் மோகனூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சண்முகம், தலைமை ஆசிரியை திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com