நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம்

திமுக கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் கூட்டுறவு காலனியில் உள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திமுக கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் கூட்டுறவு காலனியில் உள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட அவைத் தலைவர் இரா. நடனசபாபதி தலைமை வகித்தார்.
 கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், பரமத்திவேலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி கலந்து கொண்டு கூட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். துணைச் செயலாளர்கள் எஸ் .சேகர் எம்.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில், வரும் அக்டோபர் 3-ஆம் தேதி ஆளும் அதிமுக அரசைக் கண்டித்து பள்ளிபாளையத்தில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி பங்கேற்கும் பொதுக் கூட்டத்திலும், அக்டோபர் 4-ஆம் தேதி திருச்செங்கோட்டில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலு பங்கேற்கும் பொதுக் கூட்டத்திலும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஊராட்சி, வார்டு கழகச் செயலாளர்கள், கழக தொண்டர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com