புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: ஆட்சியர் எச்சரிக்கை

வீடுகளை வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது கடுமையான

வீடுகளை வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும், வீடுகளுக்கும் சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழத்தில் குட்கா, நிகோடின் பாக்கெட்டுடன் கூடிய பான் மசாலா, புகையிலை, நிகோடினை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை விற்க தடைசெய்யப்பட்டுள்ளது.
எனவே, தடைசெய்யப்பட்ட பொருள்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது, வாகனங்களில் கொண்டு செல்வது, விநியோகிப்பது மற்றும்  சில்லறையாக விற்பனை செய்வது குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் விற்பனையாளர்களின் உணவுப் பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும்.
குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட பொருள்களை சிலர் பதுக்கி வைத்துள்ளது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குடியிருப்புப் பகுதியிலும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால், அந்த வீடு மூடப்பட்டு சீல் வைக்கப்படும். அந்த வீட்டின் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், 9444042322 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com