நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளராக காந்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த ராஜேந்திரன், கிருஷ்ணகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், தருமபுரியில் பணியாற்றி வந்த காந்தி, நாமக்கல்லுக்கு மாற்றப்பட்டார். அவர், வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.