நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில், மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வசதியாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அளித்துள்ளது.
அதன்படி, புதுப்பித்தல் சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரி வாயிலாகவும் புதுப்பிக்கலாம்.