பரமத்தி வேலூர் அருகே அனிச்சம்பாளையம் குட்டுக்காடு பகுதியில் முறைகேடாக காய்ச்சப்பட்ட 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பரமத்தி வேலூர் போலீஸார் கீழே கொட்டி அழித்தனர்.
மேலும் தப்பியோடியவரைத் தேடி வருகின்றனர். பரமத்தி வேலூர் அருகே அனிச்சம்பாளையம் காவிரிக்கரை குட்டுக்காடு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதையடுத்து பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீஸார் குட்டுக்காடு பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த பகுதியைக் கண்டுபிடித்து அங்கிருந்த 200 லிட்டர் கள்ளச் சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர்.
மேலும் அங்கிருந்து தப்பியோடிய அனிச்சம்பளையத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தைத் தேடி வருகின்றனர்.