தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க. கூட்டணி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தி.மு.க. கூட்டணி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட அனைத்து சார்புஅணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான செ.காந்திச்செல்வன் பேசுகையில், மக்களவைத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை, அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். இதில், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ப.ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், நகரப் பொறுப்பாளர் ராணாஆனந்த்,  சார்புஅணி அமைப்பாளர்கள் பெ.நா.பழநிசாமி, வ.க.அறிவழகன், சம்பத், கே.சுகுமார், டாக்டர் இளமதி, கே.ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com