மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார்(59). இவர் இருசக்கர வாகனத்தில் சமயநல்லூர்-மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பட்டாசு நிறுவனம் அருகில் சென்றபோது பின்னால் வந்த லாரி உதயகுமார் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்துத் தொடர்பாக உதயகுமாரின் மகன் சதீஸ்குமார் அளித்தப்புகாரின்பேரில் சமயநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் தமிழரசனை(37) கைது செய்தனர்.