மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், விவசாயம் தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். ஆகவே, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் நேரடியாக வழங்கி பயன்பெறலாம்.