தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம்

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் சார்பில் தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் சார்பில் தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 பிரதமரின் தூய்மை இந்திய இயக்கம் குறித்த விழிப்புணர்வை சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தை  மதுரைக் கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா தொடங்கி வைத்தார். தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அதிகாரிகள் ஓ.பி.ஷா,  கூடுதல் கோட்ட மேலாளர் ஜி.சாஹூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ரயில்வே மேல்நிலைப் பள்ளி சாரண, சாரணீயர் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். மேலும் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com