வைகை ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு

வைகை ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதுரை அவனியாபுரம்

வைகை ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் நவீன் (10). இச்சிறுவன், வெள்ளிக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் வைகை ஆற்றுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, நவீனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிய அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், அண்ணா நகர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com