உசிலம்பட்டியில் வாக்காளர் சேர்க்கை முகாம்

உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை புதிய வாக்காளர் சேர்த்தல் முகாம் நடைபெற்றது.

உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை புதிய வாக்காளர் சேர்த்தல் முகாம் நடைபெற்றது.
 இந்த முகாமில் 18 முதல் 19 வயது வரையிலான புதிய வாக்காளருக்கான புதிய மனுக்கள் ஆண்களிடம் 537மனுக்களும், பெண்களிடம்  402 மனுக்களும்  பெறப்பட்டன. இதே போல் 19 வயதிற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் ஆண்களிடம் 283 மனுக்களும், பெண்களிடம் 276 மனுக்களும்  பெறப்பட்டன. மேலும் நீக்கம் செய்ய 60 மனுக்களும், திருத்தம் செய்ய 114 மனுக்களும், முகவரி மாற்றம் செய்ய 52 மனுக்களும் ஆக மொத்தம் 1,724 மனுக்கள் பெறப்பட்டன. 
இந்த முகாம் நடைபெறும் வாக்குசாவடி மையங்களை உசிலம்பட்டி கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன், துணைவட்டாட்சியர் மணிகண்டன், உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியும், துணை வட்டாட்சியருமான மணிகண்டன் கூறியது: புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்  உள்ளிட்ட முகாம்  அக்டோபர் 7  மற்றும் 10 ஆம் தேதிகளில் அந்தந்த வாக்குசாவடி மையங்களில் நடைபெறும். மேலும் மற்ற தினங்களில் தாலுகா அலுவலகத்திலுள்ள தேர்தல் பிரிவில் தங்களது மனுக்களை கொடுக்கலாம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com