திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 19) மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜா. பிரீடா பத்மினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருமங்கலம் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம், மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில், திருமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், திருமங்கலம் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின்விநியோகம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.