திருமங்கலத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 19) மின் நுகர்வோர்களுக்கான

திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 19) மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜா. பிரீடா பத்மினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருமங்கலம் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம், மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில், திருமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், திருமங்கலம் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின்விநியோகம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com