முதல்வர்  கோப்பை டேபிள் டென்னிஸ்:  சென்னை அணி சாம்பியன்

மதுரையில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில்  ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்

மதுரையில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில்  ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் மதுரை டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வந்தன.
  இதில் 32 மாவட்டங்களில் இருந்தும் ஆண்கள் அணிகள் 32  மற்றும் பெண்கள் அணிகள் 32 என 64 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக்அவுட் மற்றும் லீக்  சுற்று அடிப்படையில் நடைபெற்றன. 
 இதில் இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை அணி முதலிடம், ஈரோடுஅணி இரண்டாமிடம், காஞ்சிபுரம் அணி மூன்றாமிடம், மதுரை அணி நான்காம் இடத்தை பெற்றன.
மகளிர் பிரிவில் சென்னை அணி முதலிடம், ஈரோடு அணி இரண்டாமிடம், காஞ்சிபுரம் அணி மூன்றாமிடம், மதுரை அணி நான்காமிடம் பெற்றன.
போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிக்கு சுழல் கோப்பையுடன்  ரூ.1 லட்சம், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ரூ.75 ஆயிரம், மூன்றாமிடம் பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com