சிண்டிகேட் வங்கியின் மதுரை மண்டல அலுவலகத்தில் வங்கியின் கட்டுமானத் துறை குழு நிர்வாகிகள், வங்கி வழக்குரைஞர்கள், வங்கி குழு மதிப்புரையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் மண்டல மேலாளர் ஏ.எஸ்.அழகர்சாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய மண்டல மேலாளர் அழகர்சாமி, வங்கியின் வீட்டுக் கடன் திட்டம் பற்றி விளக்கினார். வீட்டுக் கடன் தொகையை 30 ஆண்டுகளில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் திருப்பிச் செலுத்துவதற்கான வசதிகள் குறித்து விளக்கம் அளித்தார். கடன்பெறும் வாடிக்கையாளர்கள் கடன் தொகையைத் தவறாமல் திருப்பிச் செலுத்த வேண்டும். அப்போது தான் பணம் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் கடன் வழங்கி உதவிடமுடியும். ஆகவே, கட்டுமானத் துறை குழுவினர், சிண்டிகேட் வங்கியின் கடன் திட்டம் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவித்து, நேர்மையான வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்துமாறு
கேட்டுக் கொண்டார்.
மதுரை மண்டல துணை மேலாளர் வி.எஸ்.கிருஷ்ண பிரசாத், முதுநிலை மேலாளர் கலக்கர் உள்ளிட்டோர் பேசினர்.