தேர்தல் விதிமீறல்: செலவின பார்வையாளர்களிடம்  புகார் அளிக்கலாம்

தேர்தல் செலவினங்களில் விதிமீறல்கள் குறித்து செலவின பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவினங்களில் விதிமீறல்கள் குறித்து செலவின பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரும்,  தேர்தல் அலுவலருமான ச.நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களாக ஐஆர்எஸ் அதிகாரிகள் நிலாய் பரண் சோம், சந்தியா ராணி குரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
இவர்களில் நிலாய் பரண் சோம், மதுரை மக்களவைத் தொகுதிக்கு  உள்பட்ட  மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு ஆகிய பேரவைத் தொகுதிகளிலும், சந்தியா ராணி குரே மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு பேரவைத் தொகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்காக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செலவினங்களை மேற்கொள்வதில் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறுவது தெரியவந்தால் அதுகுறித்து  செலவினப் பார்வையாளர்களிடம்  செல்லிடப்பேசியில் புகார் தெரிவிக்கலாம். 
தொடர்பு எண்கள்: நிலாய் பரண் சோம் - 93601-37674, சந்தியா ராணி குரே - 93601-37675.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com