சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் போஸ்கோ சட்டத்தில் கைது

மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸார் போஸ்கோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனர்.

மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸார் போஸ்கோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் விவேக் (23). இவர் ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில் பணியாற்றி வரும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திருக்கிறார். 
இதனையடுத்து, விவேக் அந்த சிறுமியை கடத்தி நண்பர் வீட்டில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சிலைமானில் உள்ள அய்யனார் கோயிலில் வைத்து சிறுமியை சனிக்கிழமை கட்டாய திருமணம் செய்துள்ளார். இதனிடையே சிறுமியை காணவில்லை என பெற்றோர் செல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் இருவரையும் தேடிவந்தனர்.
இதனையறிந்த விவேக், சிறுமியை பெரியார் பேருந்து நிலையத்தில் தனியாக விட்டு விட்டு சென்று விட்டார். இதனையடுத்து, வீடு திரும்பிய சிறுமி சனிக்கிழமை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விவேக்கை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து விவேக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com