தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.26-ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசு ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீர்வு காணலாம்.
குறைதீர் கூட்டம் நடைபெறும் நாளில் தீர்வு காண்பதற்கு வாய்ப்பாக, ஓய்வூதியர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர், ஆட்சியர் அலுவலகம், தேனி-625 531 என்ற முகவரிக்கு நவ.19-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.