தூத்துக்குடியில் வியாழக்கிழமை (நவ.15) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ. 15) முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை காரணமாகவும், நிர்வாக காரணமாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்துத் துறை அலுவலர்களும் தங்கள் பகுதி விவசாயிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.