போடி அருகே வெள்ளிக்கிழமை, வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர் உள்பட இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டனர்
போடி அருகே எஸ்.தர்மத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் சிவனேஸ்வரன் (18). இவர் போடி பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததால் பெற்றோர் இவரை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சிவனேஸ்வரன் விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதில் ஆபத்தான நிலையில் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதேபோல் போடி அருகே ராசிங்கபுரம் கீழப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் தேவர் (60). இவர் மூல நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த பெருமாள் தேவர் வீட்டில் விஷம் சாப்பிட்டு மயங்கிக் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்ததில் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போடி தாலுகா போலீஸார் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்