ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

போடி அணைக்கரைப்பட்டி விலக்கு பகுதியில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


போடி அணைக்கரைப்பட்டி விலக்கு பகுதியில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தேனி பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த மகேந்திரன் (30) என்பவர் ஓட்டிவந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஆட்டோவில் 21 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com