ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் சாவு

ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாட்டை தொட்ட பெண்ணும் உயிரிழந்தார்.


ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாட்டை தொட்ட பெண்ணும் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி 1-ஆவது வார்டு நாகணம்பட்டி பெரியாஞ்செட்டிபட்டியைச் சேர்ந்த காளியப்பன் (50). இவர் தனது பசுமாட்டை தோட்டத்து முள்வேலி கம்பி அருகே கட்டி வைத்திருந்துள்ளார்.
ஏற்கெனவே, முள்வேலி கம்பியில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து தொங்கிக் கொண்டிருந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு இப்பகுதியில் ஒட்டன்சத்திரம் மின்வாரியம் திடீரென மின் விநியோகம் செய்துள்ளது.
அப்போது, முள்வேலியில் மாடு உரசியதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதை அறியாத காளியப்பன் மனைவி லட்சுமி (45), ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பால் கறப்பதற்காக மாடு அருகே சென்றுள்ளார். அங்கு மாடு படுத்து கிடந்ததாகக் கருதி தட்டி எழுப்பும்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து காளியப்பன் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com