தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை சீரமைப்புக்கு ரூ.3.33 கோடி ஒதுக்கீடு

தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை சீரமைப்பு பணிகளுக்கு, அரசு ரூ. 3.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை சீரமைப்பு பணிகளுக்கு, அரசு ரூ. 3.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தேனியில், மதுரை சாலையிலிருந்து நகராட்சி கர்னல் பென்னிகுவிக் பேருந்து நிலையம் வழியாக அன்னஞ்சி விலக்கு வரை 4.4 கி.மீ. தொலைவு தேனி-பெரியகுளம் புறவழிச்சாலை அமைந்துள்ளது.
தேனி பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்துப் பேருந்துகளும் இந்தச் சாலை வழியாகவே சென்று வருகின்றன.
வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள இந்தச் சாலையில் விபத்து அபாயத்தை தவிர்ப்பதற்காக, சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு அரசு ரூ.3.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான பணிகள், மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், தேனியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு தேனி என்.ஆர்.டி. அரசு மருத்துவமனை சாலையிலிருந்து காந்திநகர் வழியாக பெரியகுளம் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் தார் சாலை அமைக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், தேனி நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com