மதுரையில் நவ.22-இல் தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு குறைகேட்புக் கூட்டம்

தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு சார்பில், மதுரையில் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் குறைகேட்புக் கூட்டத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்


தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு சார்பில், மதுரையில் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் குறைகேட்புக் கூட்டத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவம்பர் 22-ஆம் தேதி காலை 11 முதல் மாலை 5.30 மணி வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு குறைகேட்புக் கூட்டம், ஆணையக் குழு துணைத் தலைவர் எல். முருகன் தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் கலந்துகொண்டு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வளர்ச்சித் திட்டப் பணிகள், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுதல் தொடர்பான நிகழ்வுகள் குறித்த புகார்கள் இருப்பின், மனு அளித்து தீர்வு காணலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com