சொத்து தகராறில் பெண் தீக்குளித்து சாவு

போடி அருகே சொத்து தகராறின்போது தீக்குளித்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார்.     

போடி அருகே சொத்து தகராறின்போது தீக்குளித்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார்.     
போடி அருகே உள்ள முத்தையன்செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராம். அரசுப் பேருந்து ஓட்டுநரான இவரது மனைவி தனலட்சுமி (37).  பரசுராமுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரிப்பு  தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இப்பிரச்னை குறித்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
 இதில் கோபமடைந்த தனலட்சுமி திடீரென வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாராம்.  பலத்த தீக்காயங்களுடன் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திங்கள் கிழமை இறந்தார்.
இது குறித்து தனலட்சுமியின் அண்ணன் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com