முதலீட்டு  தொகையை திரும்ப வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தேனியில் பி.ஏ.சி.எல்., நிதி நிறுவனத்தில் பொதுமக்களின் பல கோடி ரூபாய் முதலீட்டு தொகையை உச்ச நீதிமன்ற

தேனியில் பி.ஏ.சி.எல்., நிதி நிறுவனத்தில் பொதுமக்களின் பல கோடி ரூபாய் முதலீட்டு தொகையை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சம்மந்தப்பட்டவர்களுக்கு திரும்ப வழங்க வலியுறுத்தி புதன்கிழமை ஊழலுக்கு எதிரான இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் 
நடத்தினர்.
தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர்.சையது பஷீர் தலைமை வகித்தார். 
களப் பணியாளர்கள் தேனி முத்துக்கிருஷ்ணன், திண்டுக்கல் ருக்குமணி, புதுக்கோட்டை பா.மாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பி.ஏ.சி.எல்., நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை உச்சநீதிமன்ற 
உத்தரவின்படி சம்மந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். பி.ஏ.சி.எல்., நிதி நிறுவனத்தின் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைளை வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com