மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏஐடியுசி சார்பில் பிரசார இயக்க விளக்கக் கூட்டம் போடி திருவள்ளுவர் சிலை திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் வே.பெத்தாட்சி ஆசாத் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலாளர் என்.ரவிமுருகன் முன்னிலை வகித்தார். மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அழகிரிசாமி உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் இளையராஜா, பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.