தேனியில் அக்.4 இல் மாணவர்களுக்கு கேரம் விளையாட்டுப் போட்டி

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் அக்.4 ஆம் தேதி மாவட்ட அளவில் பள்ளி மாணவ,


தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் அக்.4 ஆம் தேதி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் கேரம் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இளநிலைப் பிரிவு போட்டியில் மழையர் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், முதுநிலைப் பிரிவு போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கது ஆதார் அடையாள எண், புகைப்படம், பள்ளித் தலைமை ஆசிரியரிமிருந்து பெறப்பட்ட வயதுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் இணைய தள முகவரியில் வரும் அக்.3 ஆம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இணைய தள பதிவு ஒப்புகை சீட்டுடன் அக்.4 ஆம் தேதி காலை 8 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com