தேனி மாவட்டம் தேவாரம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.22) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூணாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்காபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சொ.லட்சுமி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.