காரைக்காலில் இருவேறு பகுதிகளில் 2 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதி அகரம்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை (56). கொத்தனாராக வேலை செய்துவந்தார். இவர் உடல்நிலை பாதித்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நோய் தீரவில்லையாம். மனவிரக்தியில் காணப்பட்டு வந்த இவர், வீட்டின் அருகே மரத்தில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நெடுங்காடு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
காரைக்கால் பகுதி கீழகாசாக்குடி வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (48). இவர், அண்மைக் காலமாக வேலைக்குச் செல்லாமல் இருந்துவந்தாராம். குடும்பத்தினர் வேலைக்குச் செல்ல வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோட்டுச்சேரி காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.