திருப்பட்டினம் பஞ்சாயத்து அலுவலகத்தில் செப். 28-இல் உரிமம் பெறும் சிறப்பு முகாம்

திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரும் 28 -ஆம் தேதி உரிமம் பெறும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரும் 28 -ஆம் தேதி உரிமம் பெறும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரேலியஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு : திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்குள்பட்ட பகுதியில் இயங்கிவரும் அனைத்து கடைகள், வியாபாரம், தொழில் நிறுவனம், தொழிற்சாலைகள் நடத்துவோர் அதற்கான தொழில் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் பஞ்சாயத்து அலுவலகத்தில் செப். 28 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதுவரை உரிம் பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் முகாமுக்கு வந்து உரிமம் பெற்றுக்கொள்ளலாம். உரிமம் புதுப்பிக்காதவர்களும் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும், வீட்டு வரி நிலுவை, குடிநீர் கட்டண நிலுவை உள்ளிட்ட இதர வரி பாக்கி வைத்திருப்போர் செப். 29 மற்றும் 30 -ஆம் தேதிகளில் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வரியை செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com