சிங்காரவேலர் பிறந்த நாள்: முதல்வர் மரியாதை

சிங்காரவேலர் பிறந்தநாளையொட்டி, காரைக்காலில் அவரது சிலைக்கு எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சிங்காரவேலர் பிறந்தநாளையொட்டி, காரைக்காலில் அவரது சிலைக்கு எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிந்தனை சிற்பி என்று போற்றப்படும் சிங்காரவேலரின்  பிறந்தநாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் நடந்த மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில், மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) எம். ஆதர்ஷ், துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், சமாதானக் குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காரைக்கால் மாவட்ட பல்வேறு  மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தார்கள் உள்ளிட்ட பலரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடந்த 1922 -ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர் கலந்துகொண்டு, பொதுவுடைமை இயக்க பிரதிநிதியாக தம்மை அறிமுகம் செய்து, உழைக்கும் வர்க்கத்தினருக்காக பாடுபட்டவர். 1923-ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடிய முதல் மனிதர். 1925-ஆம் ஆண்டு பொதுவுடைமைக் கொடியை ஆங்கிலேய ஆதிக்கத்தின்போதே ஏற்றியவர். இதுபோன்ற பல போற்றுதலுக்குரியவர் சிங்காரவேலர் என காரைக்கால் மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் அவருக்கு புகழாரம் சூட்டிப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com