எம்ஜிஆர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி, வியாழக்கிழமை

காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி, வியாழக்கிழமை அவரது சிலை மற்றும் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியாக பிறந்தநாளை அதிமுக கொண்டாடியது. காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான  எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆரின் உருவப் படம் வைக்கப்பட்டு கட்சியினர் மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். பல்வேறு இடங்களில் அதிமுக கொடியேற்றப்பட்டது.
சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, மாவட்டப் பொருளாளர் எச்.எம்.ஏ. காதர், இணைச் செயலர் ஜீவானந்தம், சி.ஆர்.சி. ஆரிபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். காரைக்கால் மாவட்டத்தின் நகரம் மற்றும் கிராமங்கள் பலவற்றிலும் எம்ஜிஆர். நூற்றாண்டு விழா அந்தந்த பகுதி அதிமுகவினர் சார்பில்  நடைபெற்றது.
அமமுகவினர் கொண்டாட்டம் : காரைக்கால் மாவட்ட அமமுக சார்பில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆரின் உருவப் படம் வைத்து, கட்சியின் மாவட்டச் செயலர் ஜி.வி. ஜெயபால் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர். திருநள்ளாறு பகுதியில் மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கினர். மாவட்ட அவைத் தலைவர் சாகுல்ஹமீது, இணைச் செயலர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com