துணை நிலை ஆளுநர் இன்று குறைகேட்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட  மக்களிடம் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை (ஜன. 18) குறைகளைக் கேட்கவுள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட  மக்களிடம் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை (ஜன. 18) குறைகளைக் கேட்கவுள்ளார்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் (பொ) ஏ. விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு :
புதுச்சேரி துணை நிலை ஆளுநர், தனது அலுவலகத்தில் மாலை 5 முதல் 6 மணி வரை பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிவதுபோல, காரைக்கால் மாவட்ட மக்களிடம் வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 6 மணி வரை காணொலி மூலம் குறைகளைக் கேட்டறியவுள்ளார். காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்று குறைகளைத் தெரிவித்து தீர்வு காண இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகளைத் தெரிவிக்க விரும்புவோர் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை ஆட்சியரகத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். குறைகளை எழுத்து வடிவில் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com