காவல் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான புத்தாக்கப் பயிற்சி நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட காவல் துறை மற்றும் தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகம் ஆகியவை இணைந்து நடத்திய, இப்பயிற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.வியஜகுமார் தொடங்கி வைத்தார். மீனாட்சி மருத்துவமனை ஊக்கப் பயிற்சியாளர் சுபாஷ் சந்திரபோஸ் பணியிலிருக்கும் காவல் துறையினர் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழிமுறைகள் குறித்து பயிற்சியளித்தார். மீனாட்சி மருத்துவமனை தலைமை நிர்வாகி மருத்துவர் ரமேஷ்பாபு, ஒருங்கிணைப்பாளர் பூபதி குமார் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள், அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர்.