சவூதி அரேபியாவில் பணிபுரிந்தபோது உயிரிழந்தவரின் வாரிசுக்கு சவூதி அரேபிய அரசால் வழங்கப்பட்ட இழப்பீடு தொகை ரூ.19,10,715-க்கான காசோலையை நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ச. கரேல் சூசன்னா. இவர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்தபோது உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, சவூதி அரேபிய அரசால் இந்திய தூதரகத்தின் வாயிலாக வரப்பெற்ற இழப்பீட்டுத் தொகை ரூ.19 லட்சத்து 10 ஆயிரத்து 715-க்கான காசோலையை கரேல் சூசன்னாவின் தாயார் சந்திராருத் அன்புச்செல்வியிடம் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வழங்கினார்.