ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்

செம்பனார்கோவில் பகுதியில் சனிக்கிழமை ஜயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

செம்பனார்கோவில் பகுதியில் சனிக்கிழமை ஜயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து கொள்வது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை கார்த்திகை முதல் நாளையொட்டி, செம்பனார்கோவில், ஆக்கூர், மேலப்பாதி, கீழையூர், பரசலூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல  மாலை அணிந்துக் கொண்டு 48 நாள்கள் விரதத்தை தொடங்கினர். அந்தந்த பகுதியைச் சேர்ந்த குருசாமிகள் பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com