புயலால் சாய்ந்த மரங்கள் அகற்றம்

நாகை மாவட்டம், குத்தாலம் வட்டத்துக்குள்பட்ட பகுதியில், கஜா புயலால் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டன.

நாகை மாவட்டம், குத்தாலம் வட்டத்துக்குள்பட்ட பகுதியில், கஜா புயலால் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டன.
குத்தாலம் வட்டம், திருவாலங்காட்டில் கும்பகோணம்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் இருந்த ஒரு மரம் கஜா புயலின் சீற்றத்தால், வேரோடு சாய்ந்தது. இதேபோல், தொழுதாலங்குடி, தேரழந்தூர், சேத்திரபாலபுரம், கடலங்குடி, அக்கரைகொக்கூர் ஆகிய இடங்களிலும் மரங்கள் சாய்ந்தன.
குத்தாலம் வட்டாட்சியர் சபிதாதேவி தலைமையில், தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் தனசேகரன் உள்ளிட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவினர், சாய்ந்த மரங்களை அகற்றினர். இது தவிர கடலங்குடி, திருவாலங்காடு பகுதிகளில் சாய்ந்த மின்கம்பங்கள் மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் அகற்றப்பட்டு, மின்விநியோகம் சீரமைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com