சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கனரா வங்கி நிறுவனரின் 113-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வங்கி நிர்வாகத்தின் சார்பில் ஆதிதிராவிட மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தம், சம்பத்குமார், வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், கனரா வங்கியின் கிளை மேலாளர் மனோகரன் பங்கேற்று, 5-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியரில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 6 ஆதிதிராவிட மாணவியருக்கு தலா ரூ.2,500 ( 5,6,7-ஆம் வகுப்பு), ரூ.5,000 (8,9,10-ஆம் வகுப்பு ) கல்வி உதவித் தொகையாக வழங்கினர். மேலும், வங்கி உதவி மேலாளர் ரமேஷ், அலுவலர் விஜய் ஆகியோர் மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினர். பள்ளி உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் நன்றி கூறினார்.